Central Govt Pension Scheme Details 2025
மத்திய அரசின் நம்பகமான ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாக அடல் பென்ஷன் யோஜனை (Atal Pension Yojana) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த திட்டம், குறிப்பாக தனியார் துறையில் வேலை செய்பவர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்களுக்கு நிவாரணமாக அமைகிறது.
அடல் பென்ஷன் யோஜனையில் இணைய விரும்புவோர் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 40 வயதும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் இணையும்போது, பங்கேற்பாளர்கள் 60 வயது வரை மாதம் அல்லது காலாண்டு அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பிறகு, அவர்கள் செலுத்திய தொகையைப் பொருத்து மாதம் ரூ.100 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியமாக பெற முடியும்.
நல்ல கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி? || முழு விவரங்கள்..!

இந்த திட்டத்தில் பங்கு பெற வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
திட்டத்தின் கட்டண விவரங்கள் கீழ்வருமாறு:
-
மாதம் ரூ.76
-
மூன்றுமாதத்திற்கு ரூ.226
-
ஆறு மாதத்திற்கு ரூ.449
இந்த திட்டம், உங்கள் மூப்புக்கால நிம்மதியான வாழ்விற்கான நிதி பாதுகாப்பை வழங்கும் நம்பிக்கைக்குரிய தேர்வாகும்
About Me
I am Swetha, graduated in Computer Science and I am having 5 years Experience in Content Writing and Publishing articles